உத்தரக்கண்டில் பயங்கர பனிச்சரிவு - நகரமே பனிபொழிவால் மூழ்கியது...- வைரலாகும் வீடியோ...!

Viral Video Uttarakhand
By Nandhini Jan 30, 2023 12:17 PM GMT
Report

உத்தரக்கண்டில் பயங்கர பனிச்சரிவு

கடந்த சில நாட்களாக உத்தரகண்ட் மாநிலத்தில் பயங்கர பனிமழை பொழிந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு பனிப்பொழிவு பொழிந்து வருவதால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இன்று உத்தரகண்ட் மாநிலம், ஜோஷிமத் தொகுதியின் இந்திய-சீனா எல்லையில் அமைந்துள்ள மலாரி கிராமத்திற்கு அருகிலுள்ள குந்தியில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.

மேலும், உத்தரகண்ட்டில் உள்ள கங்கோத்ரி கோயிலும் அதன் சுற்றுப்புறமும் கடுமையான பனியால் மூடப்பட்டுள்ளது. 

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

chamoli-uttarakhand-terrible-avalanche