வீட்டு வாசலில் கோலமிட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு...துரத்தி பிடித்த போலீசார்

home lady chain snatching
By Praveen May 09, 2021 02:08 PM GMT
Report

சென்னை அம்பத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (40). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.

கஜலக்ஷ்மி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் செயினை வாலிபர் ஒருவர் பறித்துச் சென்றார் அப்போது கஜலட்சுமி கூச்சலிட்டுள்ளார் அப்போது ரோந்து பணியில் இருந்த அம்பத்தூர் போலிசார் விரட்டி பிடித்துள்ளனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துவந்து போலீசார் விசாரணையில் செங்குன்றம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சூரியா (வயது 19) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சூர்யா மீது 2020இல் கொலை வழக்கும் 16 க்கும் மேற்பட்ட கொலை முயற்சி திருட்டு வழிப்பறி என பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 4 சவரன் எடைகொண்ட தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் குற்றவாளியை விரைந்து பிடித்த அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராஜி அவர்களை அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் வெகுவாகப் பாராட்டினார்.