கோவையில் சாதி, மதம் அற்றவர் என மகளுக்கு சான்றிதழ் பெற்ற பெற்றோர் - குவியும் வாழ்த்து
By Nandhini
கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மூன்றரை வயது மகள் வில்மாவுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றிருக்கிறார்.
இது குறித்து கார்த்திக் கூறுகையில், என் 3 வயது மகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதி சான்றிதழ் இல்லாததால் அனுமதிக்க மறுத்தனர். எனவே, இந்தச் சான்றிதழை பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் செயலுக்கு பலர் ஆதரவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan