மக்களே எச்சரிக்கையாக இருங்கள் : அதிகரிக்கும் கொரோனா .. மத்திய அரசு வார்னிங்
கொரோனா அளவை கட்டுப்படுத்த மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்தாலும் அதற்கான முறையான பரிசோதனைகள் ஏதும் நடக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர்தெரிவித்துள்ளார். இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனா பாதிப்பு 1500-ஐ தாண்டியது, இதனால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் முடிந்த அளவிற்கு சீக்கிரம் அவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.