கொட்டப்போகும் சம்பளம் - மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த டபுள் ஜாக்பாட்!

Narendra Modi
By Sumathi Jul 04, 2023 04:34 AM GMT
Report

மத்திய அரசுப் பணியாளர்களுக்கான வீட்டு வாடகைப் படியை உயர்த்த ஆலோசனை நடைப்பெற்று வருகிறது.

புதிய பென்சன்

புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் என்ற வகையில் மாற்றப்படவுள்ளது.

கொட்டப்போகும் சம்பளம் - மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த டபுள் ஜாக்பாட்! | Central Government Employees Huge Hike In Hra Soon

தற்போதைய நிலவரப்படி, அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அகவிலைப்படி உயர்வு

இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.

அதன்படி, 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆக இருக்கும். இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாத தொடக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பெரும்பாலும் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 42 சதவிகிதம் அகவிலைப்படி வாங்குபவர்கள் இனி 46 சதவிகிதம் வாங்குவார்கள்.