பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

Central government Padma awards
By Petchi Avudaiappan Jun 11, 2021 12:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பங்களை https:/padmaawards.gov.in எனும் தளம் வழியாக மட்டுமே அனுப்பமுடியும்.