நிரவ் மோடி கூட்டாளி கைது :இந்தியா கொண்டு வந்தது சிபிஐ

niravmodi cbiarrest subhashparab
By Irumporai Apr 12, 2022 06:28 AM GMT
Report

நிரவ் மோடியின் நண்பரான பராப் சுபாஷ்சங்கரை சிபிஐ இந்தியாவுக்கு அழைத்துவந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ13,500 கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் கொடுக்காமல் வைர வியபாரி நீரவ் மோடி தப்பியோடினார்.

இந்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் அவருடன் தப்பியோடி அவரது நண்பர் பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில்வைத்து கைது செய்து இந்தியா அழைத்து வந்துள்ளது சிபிஐ .

நிரவ் மோடி கூட்டாளி கைது :இந்தியா கொண்டு வந்தது சிபிஐ | Cbi Arrests Nirav Modi Subhash Parab To India

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் கடந்த 2018- ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய நிலையில் எகிப்தில் உள்ள கெய்ரோவில் தங்கி உள்ளதாக கிடைத்த தகவல் கிடைத்த நிலையில் 50 வயதான பராப் சுபாஷ் சங்கரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது சிபிஐ.