கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறைக்கு என்ன காரணம்? - கனிமொழி எம்பி கேள்வி

covid19 tamilnadu kanimozhi
By Irumporai Apr 29, 2021 08:26 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறைக்கு என்ன காரணம்? அதன் பின்னணி என்ன என்பதனை கண்டுபிடித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கிறார்களா? என்பதனை முறையாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ள கனிமொழி.

கொரோனா தடுப்பு மருந்துக்கு தனியார் மருந்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட என்ன காரணம்? என்பதனை கண்டுபிடித்து அதனை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.