நடத்துனரிடம் டிக்கெட் வேண்டாம் என்று வாக்குவாதம் - மூதாட்டி மீது வழக்குப்பதிவு

Tamil nadu Coimbatore Tamil Nadu Police
By Thahir Oct 01, 2022 06:03 AM GMT
Report

பேருந்தில் நடத்தினரிடம் டிக்கெட் வேண்டாம் என்று வாக்குவாதம் செய்த மூதாட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் அரசுப் பேருந்தில் சென்ற மூதாட்டி துளசியம்மாள் என்பவர் எனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம் எனக் கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் தமிழகமே ஓசி டிக்கெட்டில் வந்தாலும் நான் வர மாட்டேன். இந்தா காசு பிடி எனக் கூறி நடத்துநரிடம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றார்.

நடத்துனரிடம் டிக்கெட் வேண்டாம் என்று வாக்குவாதம் - மூதாட்டி மீது வழக்குப்பதிவு | Case Registered Against Old Lady

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், திமுக ஐடிவிங்கைச் சார்ந்த ராஜீவ் காந்தி அதிமுக ஐடிவிங்கைச் சார்ந்தவர்கள் வேண்டுமென்றே பிரச்சனை செய்ய வைத்து வீடியோ எடுத்து பதிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று மூதாட்டி துளசியம்மாள் மீதும் அதிமுகவினர் 3 பேர் மீதும் திமுக ஆட்சி குறித்து அவதுாறு பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.