இந்துக்களுக்கு எதிராக பேசிய நயன்..? காவல்துறை பரபரப்பு வழக்குப்பதிவு

Jai Nayanthara Mumbai
By Karthick Jan 08, 2024 09:38 AM GMT
Report

மும்பை காவல்துறையினர் நடிகை நயன்தாரா வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னப்பூரணி

நயன்தாரா, ஜெய், சத்யராஜ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் "அன்னப்பூரணி". திரையரங்கில் வெளியான இப்படம், நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், சமீபத்தில் தான் படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

case-filled-against-nayanthara-in-mumbai

சமையல் போட்டி பின்னணியில் படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். OTT வெளியான நிலையில், படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சர்ச்சை - FIR

இந்த படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், ‘லவ் ஜிகாத்தை’ ஊக்குவிப்பதாகவும் வசனங்கள் இடம்பெறுள்ளதாக கூறி புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. ராமரைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தைச் சேர்த்ததாகக் கூறப்படுவதால் மும்பையில் நயன்தாரா, ஜெய் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

case-filled-against-nayanthara-in-mumbai

படத்தில் நடித்த நயன்தாரா, ஜெய், தவிர படத்தின் இயக்குனர் நிலேஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜதின் சேத்தி, ஆர் ரவீந்திரன் மற்றும் புனித் கோயங்கா, ஜீ ஸ்டுடியோவின் தலைமை வணிக அதிகாரி ஷாரிக் படேல் மற்றும் நெட்ஃபிக்ஸ் இந்தியாவின் தலைவர் மோனிகா ஷெர்கில் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.  

case-filled-against-nayanthara-in-mumbai

case-filled-against-nayanthara-in-mumbai