திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

case police dmk candidate trichy
By Jon Mar 22, 2021 11:24 AM GMT
Report

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் இனிகோ இருதயராஜ்.

இந்தநிலையில், திருச்சி கே.கே.நகர் பஸ்நிலையத்தில் பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக தி.மு.க.

வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உள்பட 300 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.