கள்ளக்குறிச்சியில் காலையில் நடந்த சோகம் : கார் டயர் வெடித்து சார் ஆட்சியர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கார் டயர் வெடித்ததில் சார் ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் ராஜாமணி, இவர் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி பிரிவில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை சங்கராபுரத்தில் ஆய்வு மேற்கொள்ள கள்ளக்குறிச்சியிலிருந்து தனது அரசு காரில் சென்றுள்ளார் அப்போது திடீரென கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், அவருடன் பயணம் செய்த 5 பேரும் சிகிச்சைக்ககா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆய்வு சென்ற சார் ஆட்சியர் கார் டயர் வெடித்து மரணித்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.