கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு - மேலும் 2 பேர் கைது
Tamil nadu
Coimbatore
By Thahir
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 2 பேர் கைது
கோவையில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
கார் வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் இறந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வரும் நிலையில், தற்போது கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.