“மன உளைச்சலில் கோலி?..தனது கேப்டன்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை நிரூபிக்க பதவி விலகினாரா?” - வெளியான தகவல்

test match virat kohli captaincy controversy chetan sharma kohli injury
By Swetha Subash Jan 04, 2022 07:15 AM GMT
Report

விராட் கோலி, தனது கேப்டன்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை நிரூபிக்க தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளும் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கும் கடைசி நேரத்தில் கேப்டன் விராட் கோலியே போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

இந்திய அணியில் கோலிக்கு காயம் என்பதை இதற்கு முன் எத்தனை வருடங்களுக்கு முன்பு பார்த்திருப்போம் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

ஏனென்றால் அப்படி உடற்தகுதியை பார்த்துக்கொள்ளும் கோலி திடீரென விலகியது பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி கோலியின் 100வது டெஸ்டாக இருந்தது.

ஆனால் அது தற்போது தள்ளிப்போயுள்ளது. கோலியின் விலகல் குறித்து பேசியிருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக உட்காரவைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனால் ரசிகர்களின் கவனம் கே.எல்.ராகுல் பக்கம் திரும்பியது.

இந்நிலையில், கேப்டன்சி விவகாரத்தில் விராட் கோலி மீண்டும் மன உளைச்சலில் இருப்பதாகவும், நான் இல்லாமல் இந்திய அணி எப்படி வெற்றி பெற்றுவிடும் என்பதை பார்த்துவிடுகிறேன் என்பதற்காக தான் 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இந்த பிரச்சினை எழுவதற்கு காரணம், சமீபத்தில் தேர்வர்கள் குழு தலைவர் சேட்டன் சர்மா கூறிய புது கருத்து தான்.

விராட் கோலி டி20 கேப்டன்சியில் இருந்து விலகிய போது அவரிடம் பதவி விலக வேண்டாம் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதா இல்லையா என்பதில் கோலி - பிசிசிஐ இடையே மாறுபட்ட கருத்து இருந்தது.

இது குறித்து இறுதியாக வாய்த்திறந்த சேட்டன் ஷர்மா, கோலியிடம் பதவி விலக வேண்டாம் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

இந்த கருத்தால் விராட் கோலி தான் கேப்டன்சி விவகாரத்தில் பொய் கூறுகிறாரா என குழப்பம் எழுந்தது.

இதனையடுத்து விராட் கோலி கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் எனது கேப்டன்சியை வைத்து தான் பிரச்சினை ஏற்படுகிறது, நான் இல்லாமல் எப்படி ஜெயிக்கிறது என்று பார்க்கிறேன் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், இதன் உண்மை நிலை தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.