செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என கைவிரித்த நீதிமன்றம்..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி - ED
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த ஆவணங்கள் பற்றிய தகவலை பெற செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஏற்க மறுத்த நீதிமன்றம்
கடந்த 28-ஆம் தேதியுடன் அவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவரின் காவலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அந்த காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த மனுவை முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என தெரிவித்து, வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.