கன்றுக் குட்டியை துடிக்க துடிக்க கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள் - குற்றவாளிகளை தூக்கிலிட பொதுமக்கள் போராட்டம்

youth rape calf public-struggle கன்றுக் குட்டி கூட்டு பலாத்காரம்
By Nandhini Feb 17, 2022 09:37 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 பேர் சேர்ந்து பசு கன்றுக்குட்டியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதி உள்ளது. இந்த பகுதியில், ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா என்ற 4 இளைஞர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

அந்த மலைப்பகுதியில் ஒரு கன்றுக்கு குட்டி படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த இந்த 4 பேரும் கன்று குட்டியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததை ஒருவன் வீடியோவாக படம் எடுத்துள்ளான்.

இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட இணையதளவாசிகள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த விஷயம் அப்பகுதி முழுவதும் தெரியவர, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒன்று திரண்டு, அந்த 4 பேரை தூக்கில் போட வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.