6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 14 வரை நடைபெற உள்ளது.
வேட்புமனு மீதான பரிசோதனை அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும்.வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 17 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
By-elections to 7 Assembly seats across 6 States to be held on 3rd November, results on 6th November pic.twitter.com/6ezM1WHDqV
— ANI (@ANI) October 3, 2022