ஓட்டுநரை காலனியால் தாக்கிய மேலாளர் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்
ஓட்டுநரை காலணியால் தாக்கிய மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சரமாரி தாக்குதல்
மதுரையில் இருந்து கோவை செல்வதற்கான பேருந்து, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அதில் இருக்கைகள் முழுமையாக நிரம்பிய நிலையில், பேருந்தை எடுக்குமாறு ஓட்டுநரிடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பணிமனை மேலாளர் உத்தரவின்றி பேருந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக எடுத்துச் செல்ல முடியாது என ஓட்டுநர் சொன்னதாக கூறப்படுகிறது.
மேலாளர் சஸ்பெண்ட்
அதனால் மேலாளரிடம் பயணிகளே சென்று, பேருந்தை விரைவாக எடுக்கச் சொல்லி கேட்டுள்ளனர். உடனே ஆத்திரமடைந்த மேலாளர் மாரிமுத்து, பயணிகளை தூண்டி விடுகிறாயா என கேட்டு, ஓட்டுநர் கணேசனை காலணியால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேலாளர் மாரிமுத்துவை பணி இடைநீக்கம் செய்து மதுரை மண்டல மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.