அபராத தொகை செல்லானை விருது பெரும் ரேஞ்சில் வாங்கிய வாகன ஓட்டி - ஜாலியாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
அபராத தொகைக்கான ரசீதை பெறும்போது மாஸாக போஸ் கொடுத்த வாகன ஓட்டியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விதிமீறல்கள்
இந்தியா முழுவதும் சாலை விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் விதிகளை மீறுவோருக்கு அதிகப்படியான அபராத தொகை விதிக்கப்படுகிறது. தற்போது விதிமீறல்களில் ஈடுபடுபவர்களைப் புகைப்படம் எடுத்து வாகன எண்ணுடன் காவல் துறையை சமூக வலைத்தளங்களில் டேக் செய்தால் போதும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராத தொகை விதிக்கப்படுகிறது.
அபராதம்
இந்நிலையில் கர்னாடக மாநிலம் பெங்களூருவில் பள்ளிக்கூட பஸ் ஒன்று பள்ளி மாணவர்களை உள்ளே வைத்துக்கொண்டு யூ டேர்ன் எடுக்க அனுமதி இல்லாத சாலையில் யூ டேர்ன் எடுத்தது. ஆபத்தான முறையில் யூ டேர்ன் எடுத்த பஸ்ஸை சில வாகன ஓட்டிகள் வண்டி என்னுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போக்கு வரத்து போலீசாருக்கு டேக் செய்துள்ளனர்.
மாணவர்களின் உயிரைப் பற்றி கவலை இல்லாமல் ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த வாகன ஓட்டியை பிடித்த போலீசார் அபராதம் விதித்து செல்லானை (Challan) கொடுத்துள்ளனர்.
அப்போது ஏதோ விருது வாங்கும் அளவிற்கு அந்த செல்லானை வாகன ஒட்டி பெற்றுள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.