கோர சம்பவம் : பஸ் மீது லாரி மோதி விபத்து; 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி; 12 பேர் படுகாயம்!

India Rajasthan Accident
By Jiyath Sep 13, 2023 09:51 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் இருந்து ஆன்மீக பயணமாக குஜராத்தை சேர்ந்த குழுவினர் உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவன் நகருக்கு பேருந்து ஒன்றில் சென்றுள்ளனர்.

கோர சம்பவம் : பஸ் மீது லாரி மோதி விபத்து; 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி; 12 பேர் படுகாயம்! | Bus Accident 11 People Died 12 People Injured

அவர்கள் அதிகாலை 4.30 மணிக்கு பரத்பூர் அருகே லக்கன்பூரில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து பழுதாகி நின்றது. அதில் சில பயணிகள் பேருந்தின் பின் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று அந்த பயணிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

11 பேர் பலி

இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 5 பேர் ஆண்கள், 6 பெண்கள்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.