டி20 உலககோப்பையிலிருந்து பும்ரா விலகல் : இந்தியாவுக்கு விழுந்த பெரிய இடி
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
பும்ரா காயம்
தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வ குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரிஷப் பண்ட் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் மீண்டும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் பும்ராஹ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் முதல் டி.20 போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெறாததால், அஸ்வின் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போட்டியிலிருந்து விலகல்
இந்தநிலையில், பிசிசிஐ., தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பும்ராஹ்விற்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பும்ராஹ் காயத்தில் இருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியிருந்த நிலையில், தற்போது மீண்டும் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.