ஜெய்ஸ்வால் கேட்சை விட்ட காரணம் இதுதான்; கோபம் வரல - பும்ரா தகவல்
கேட்ச்களை விட்டது குறித்து, பும்ரா பேட்டியளித்துள்ளார்.
கேட்ச் விவகாரம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மூன்று கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டார். இதைப்பார்த்து அந்த பந்தை வீசிய பும்ரா முகத்தை மூடிக்கொண்டார்.
மேலும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓய்வறையில் தனது கையில் இருந்த பந்தை எறிந்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பும்ரா பேட்டி
இந்நிலையில் இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள பும்ரா, ‘‘கேட்ச்களை விட்டபோது, சில நொடிகள் நான் மிகவும் சோகத்துடன்தான் இருந்தேன். இது போட்டியின் ஒரு பகுதிதான். அணியில் அதிகமாக இளம் வீரர்கள் இருக்கிறார்கள். கடினமாக பயிற்சி மேற்கொண்டப் பிறகுதான், போட்டியில் ஆட வந்துள்ளனர். கேட்ச் விட்டதும் அவர்களை பார்த்து கத்தி, கோபப்பட கூடாது.
இது அவர்களுக்கு மேலும் அழுத்தங்களை அதிகரிக்கும். அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும்போது, அனுவபம் பெறும்போது, இன்னமும் சிறப்பாக செயல்படுவார்கள். சில நேரம், அதிக குளிர் காரணமாகவும் கூட கேட்சை பிடிக்க முடியாத நிலை இருக்கும்.
இங்கிலாந்து காலநிலை, இந்திய காலநிலையைவிட முற்றிலும் மாறுபட்டது. இதனால்கூட, கேட்ச்களை பிடிக்காமல் இருந்திருக்கலாம். இந்த விஷயம், ஒருபோதும் என்னை பாதிக்காது. நான் எப்போதும், முன்னோக்கி சென்றுகொண்டே இருப்பேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.