திடீரென சீறிய காளை - அசால்ட்டாக Handle பண்ண அண்ணாமலை
மேலூரில் பாதயாத்திரையின் போது, அண்ணாமலையை கண்டதும் காளை ஒன்று சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலையின் பாதயாத்திரை
தமிழகமெங்கும் "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ஆம் துவங்கிய இந்த பாதயாத்திரையில் இன்று மதுரை மேலூருக்கு அண்ணாமலை வந்தடைந்தார்.
அவருக்கு சிறப்பான வரவேற்பினை அளிக்க அப்பகுதி பாஜக தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சீறிய காளை
அப்போது நான்கு ஜல்லிக்கட்டு காளைகளும் அண்ணாமலையை வரவேற்க கொண்டுவரப்பட்டிருந்தன. அண்ணாமலை அருகில் வந்ததும் திடீரென ஒரு ஜல்லிக்கட்டு காளை மட்டும் கூட்டத்தை பார்த்ததும் மிரண்டு திமிறியது.
உடனே காளையின் உரிமையாளர் அதனை அடக்க, பின்னர் காளையின் தலையில் கையை வைத்து வணங்கி அண்ணாமலை அதனை அசுவாசப்படுத்தினார். இந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகின்றது.