கூட பிறந்த தம்பியை வெறித்தனமாக தாக்கி கொடூரக் கொலை செய்த அண்ணன்கள் - நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
நாமக்கல் மாவட்டத்தைத் சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆனந்தன் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மூன்றாவது மகனான குரு தந்தையுடன் மதுபான பாரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அங்கு வந்த அவரது மூத்த மகன்களான கார்த்திக் மற்றும் அசோக் ஆகியோர் குருவை சரமாரியாக தாக்கினார்கள்.
இதைப் பார்த்த தந்தை இரு மகன்களையும் தடுக்க முயற்சி செய்தார். அப்போது, தந்தையைப் பார்த்து இந்தப் பிரச்சனையில் தலையிடாதீர்கள் என்று கூறி தள்ளிவிட்டு குருவை தாக்கி இருக்கிறார்கள். தந்தை எவ்வளவோ தடுத்தும், இரு சகோதரர்களும் சேர்ந்து குருவின் தலையில் கற்களால் அடித்து கொலைவெறியில் தாக்கினார்கள்.
பின்பு, அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்து குருவின் கழுத்துப்பகுதியில் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இதனால், பதறிப் போன தந்தை இது பற்றி குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த குருவை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், குரு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் மற்றும் அசோக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், குரு தனது தாயார் பூங்கொடி இடம் பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த அவரது இரு சகோதரர்கள் சேர்ந்து குருவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இவர்கள் இருவரையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடன்பிறந்த அண்ணன்களே தம்பியை வெறித்தனமாக தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.