பாலியல் துன்புறுத்தல்... - நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்க தயார்... - மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் ஆவேசம்...!
பாலியல் துன்புறுத்தல் நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்க தயார் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தர்ணா
இன்று டெல்லியில் திடீரென வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்த வீரர் பஜ்ரங் பூனியா. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா செய்தியாளர்கள் பேசுகையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை. மல்யுத்த பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர்.
மேலும் கூட்டமைப்பிற்கு பிடித்த சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்து கொள்கின்றனர். சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். அவர்கள் (கூட்டமைப்பு) எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். நம்மைச் சுரண்டுகிறார்கள்.
நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களிடம் பிசியோ அல்லது பயிற்சியாளர் இல்லை. நாங்கள் குரல் எழுப்பியதால், நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம். மல்யுத்த விளையாட்டு என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும். எங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றனர்.
தூக்கில் தொங்க தயார்
இது குறித்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எந்த வீரரையாவது கூட்டமைப்பு துன்புறுத்தியது என்று கூற யாராவது இருக்கிறார்களா?, பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அப்படி எதாவது நடந்திருந்தால் நான் தூக்கில் தொங்க தயார். வினேஷ் போகத்திடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.
அவர் ஏன் ஒலிம்பிக்கின்போது, நிறுவனத்தின் லோகோ (அடையாள சின்னம்) தெரியும்படியான உடையை அணிகிறார்? அவர் போட்டியில் தோல்வி அடைந்தபோது கூட, நான் அவரை ஊக்கப்படுத்த மட்டுமே செய்தேன். பாலியல் துன்புறுத்தல் என்பது மிக பெரிய குற்றச்சாட்டு. எனது பெயர் கெடுப்பதற்காக இப்படி செய்தால், நான் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்றார்.
There has been no incident of sexual harassment. If such a thing has happened, then I will hang myself: Brijbhushan Sharan Singh, President, Wrestling Federation of India https://t.co/tXcwBgswcB pic.twitter.com/EXC75eDyyQ
— ANI (@ANI) January 18, 2023