பாலியல் நோக்கமின்றி பெண்களை கட்டிபிடிக்கலாம், தொடலாம்...பிரிஜ் பூஷன் தரப்பு வாதம்
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் பாஜகவின் அமைச்சர் பிரிஜ் பூஷன் சிங் உச்சநீதிமன்றத்தில், தனது வாதங்களை முன்வைத்து வருகின்றது.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்
மத்திய பாஜக அமைச்சர் பிரிஜ் பூஷன் சிங் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெல்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த மாதம் 15ம் தேதி டெல்லி போலீஸ் பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு கடந்த ஜூலை 18ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டிபிடிக்கலாம், தொடலாம்
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பிரிஜ் பூஷன் பாலியல் தரப்பில் அவரது வழக்கறிஞர் ராஜீவ் மோகன் வாதங்களை முன்வைத்தார். அதில், "இந்த குற்றங்கள் இந்தியாவுக்கு வெளியில் நடந்திருப்பதாக கூறப்படுவதால், இதை உள்நாட்டில் விசாரிக்க முடியாது. அதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அனுமதி கிடையாது என வாதிட்டார்.
இந்தியாவுக்குள் நடந்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் மட்டுமே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கட்டிப்பிடித்ததாக கூறப்படுவது. குற்றவியல் சக்தியோ அல்லது பாலியல் நோக்கமோ இல்லாமல் ஒரு பெண்ணைத் தொடுவது குற்றமாகாது. மல்யுத்தத்தில் ஆண் பயிற்சியாளர்கள்தான் அதிகம் இருக்கின்றனர்.
பெண் பயிற்சியாளர்கள் குறைவு. இப்படி இருக்கையில் போட்டியில் ஒரு வீராங்கனை வெற்றி பெற்றுவிட்டால் உற்சாகத்தில் அவரை கட்டியணைப்பது குற்றமாகாது. அதேபோல தோல்வியின் போதும் ஆறுதலுக்காக கட்டிப்பிடித்தல் குற்றமாகாது" என்று கூறியுள்ளார்.