திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம் - மணமகள் சுவாரஸ்ய தகவல்

United States of America Marriage
By Sumathi Jun 20, 2025 02:30 PM GMT
Report

திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு அபராதம் விதிக்க மணமகள் கூறிய தகவல் கவனம் பெற்றுள்ளது.

வராத விருந்தினர்கள்

அமெரிக்கா, மினசோட்டா என்ற பகுதியில் நடந்த திருமணத்தில், வர முடியாமல் போன விருந்தினர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மணமகள் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம் - மணமகள் சுவாரஸ்ய தகவல் | Bride Wants Fine Guests Rs 4300 Missing Wedding

இதுதொடர்பாக Reddit தளத்தில் பகிரப்பட்டுள்ள தகவலின்படி, கடைசி நிமிடத்தில் அவரின் அம்மா உள்பட சில விருந்தினர்கள் திருமணத்திற்கு கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

என் 100 குழந்தைகளுக்கு 17 பில்லியன் டாலர் சொத்தை வழங்குகிறேன் - டெலிகிராம் சிஇஓ

என் 100 குழந்தைகளுக்கு 17 பில்லியன் டாலர் சொத்தை வழங்குகிறேன் - டெலிகிராம் சிஇஓ

மணமகள் செயல்

இதற்காக அந்த மணமகள் அபராதம் விதிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். ஒவ்வொரு தட்டுக்கும் $50 (தோராயமாக ரூ.4,339)செலவு செய்திருக்கிறார். திருமணத்தை தவறவிட்ட விருந்தினர்கள் இதனை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம் - மணமகள் சுவாரஸ்ய தகவல் | Bride Wants Fine Guests Rs 4300 Missing Wedding

இதற்கு பல பயனர்கள் RSVP விருந்தினர்கள் இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க உதவும் என கமெண்ட் செய்துள்ளனர். RSVP என்பது விருந்தினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வார்களா என்பதை உறுதிப்படுத்த அழைப்பிதழில் உள்ள கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.