முதலிரவில் மாயமான மணப்பெண்; பதறிய மாப்பிள்ளை - இறுதியில் தரகர்..

Marriage Rajasthan Crime
By Sumathi Sep 30, 2025 06:00 PM GMT
Report

திருமணமான முதல் இரவிலேயே மணப்பெண் மாயமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மணப்பெண் மாயம்

உத்தரப் பிரதேசம், ஆக்ராவை சேர்ந்த பெண்ணுக்கும் ராஜஸ்தான், கிஷான்கரைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

முதலிரவில் மாயமான மணப்பெண்; பதறிய மாப்பிள்ளை - இறுதியில் தரகர்.. | Bride Vanishes Jewelry On First Night Rajasthan

இந்த திருமணத்தை ஜிதேந்திரா என்ற திருமணத் தரகர் மூலம் பேசி முடித்துள்ளனர். இதற்காக அந்த தரகருக்கு ₹2 லட்சம் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, திருமணம் ஜெய்ப்பூரில் பாரம்பரிய சடங்குகளுடன், இசை, இனிப்புகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றுள்ளது.

அத்தையைத் திருமணம் செய்து கொண்ட மருமகன் - கதறிய மாமா!

அத்தையைத் திருமணம் செய்து கொண்ட மருமகன் - கதறிய மாமா!

தரகருடன் எஸ்கேப்

இந்நிலையில், திருமணத்தின் முதல் இரவில், தம்பதியினர் படுக்கையறைக்கு சென்றபோது, அந்த பெண் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, இன்று இரவு நாம் ஒன்றாக படுக்க முடியாது; இது எங்கள் சம்பிரதாயத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

wedding

பின் அதிகாலை 3 மணியளவில் மாப்பிள்ளை தண்ணீர் குடிக்க எழுந்தபோது, அந்தப் பெண் மாயமாகியுள்ளார். மேலும், அவர் அறையில் இருந்த பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தினர் உடனடியாக பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை . உடனே, போலீஸில் புகாரளித்ததில், திருமணத் தரகர் ஜிதேந்திரா மற்றும் அந்த பெண் இருவரும் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.