என்னை தொட்டால் 35 துண்டுகளாக வெட்டி விடுவேன் - முதலிரவில் கணவனை மிரட்டிய பெண்!

Uttar Pradesh Marriage Crime
By Sumathi Jun 26, 2025 10:28 AM GMT
Report

தன்னைத் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவதாக பெண், கணவனை மிரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மிரட்டிய புதுப்பெண்

உத்தரபிரதேசம், பிரயாக்ராஜை சேர்ந்த ஏடிஏ காலனி பகுதியைச் சேர்ந்தவர் நிஷாத்(26). இவருக்கும் கர்ச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சிதாரா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

நிஷாத் - சிதாரா

இதனையடுத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு சித்தாரா, முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். முதலிரவைக் கொண்டாட அமனுக்கு மட்டுமே உரிமை உண்டு.

திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் கள்ளக்காதலனுடன்.. கணவனின் நிலை - தொடரும் அவலம்

திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் கள்ளக்காதலனுடன்.. கணவனின் நிலை - தொடரும் அவலம்

கதிகலங்கிய கணவன்

பெற்றோர் வற்புறுத்தியதால் தான் மட்டுமே உன்னை திருமணம் செய்துகொண்டேன் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து 3 நாட்களுக்கு இவ்வாறு நடந்துள்ளார். உயிருக்கு பயந்து நிஷாத் இரவு முழுவது தூங்காமல் இருந்துள்ளார்.

என்னை தொட்டால் 35 துண்டுகளாக வெட்டி விடுவேன் - முதலிரவில் கணவனை மிரட்டிய பெண்! | Bride Groom First Night Condition Uttar Pradesh

இதனால் மன அழுத்தத்தில் இருந்த நிஷாத் வேறு வழியில்லாமல் நடந்த சம்பவத்தை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சித்தாரா மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இருப்பினும் சித்தாரா, நிஷாத் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.