தாலியை பிடுங்கிய மணப்பெண்; இப்படி பண்ணிட்டாங்களே.. கதறிய மாப்பிள்ளை!

Marriage Ramanathapuram
By Sumathi Aug 22, 2023 07:37 AM GMT
Report

மணமகனிடம் இருந்து தாலியை பறித்த மணப்பெண் செய்த செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

ராமநாதபுரம், திருவாடானை அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயது இளைஞர். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 21 வயதான பெண்ணுக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தாலியை பிடுங்கிய மணப்பெண்; இப்படி பண்ணிட்டாங்களே.. கதறிய மாப்பிள்ளை! | Bride Called Off The Wedding At The Last Minute

அதன்படி, கோவில் ஒன்றில் முகூர்த்த நேரத்தில் மணமகளும், மணமகனும் திருமணம் நடத்தப்படும் இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து திருமணத்திற்கான சடங்குகள் நடைபெற்றது. அதன்பின் மணமகன் தாலியை கட்ட முயல்கையில் மணப்பெண், மணமகனிடம் இருந்து தாலியை பறித்தார்.

பதறிய குடும்பம்

அதனை உண்டியலில் தான் போடுவேன் எனக்கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விசாரித்ததில், இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார். உடனே மணமகன் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததார்.

தாலியை பிடுங்கிய மணப்பெண்; இப்படி பண்ணிட்டாங்களே.. கதறிய மாப்பிள்ளை! | Bride Called Off The Wedding At The Last Minute

சம்பவ இடம் விரைந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.3 லட்சத்துக்கு மேல் பணம் செலவாகி உள்ளது. எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே மணப்பெண், அவருடைய பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாப்பிள்ளை புகார் அளித்துள்ளார்.

"தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கட்டாயத்தினால் சம்மதம் தெரிவித்தேன்" என மணப்பெண் பெற்றோர் மீது புகாரளித்துள்ளார். இதற்கிடையில், மாப்பிள்ளை வீட்டில் திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் குறித்து அறியாதவர்கள் சாப்பிட்டு விட்டு மொய் எழுதி சென்றுள்ளனர்.