இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்த அணி தான் வெல்லும்.. பிரெட் லீ கணிப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போட்டி இங்கிலாந்தில் சவுத்தாம்டனில் வருகிற 18-ம் தேதி தொடங்குகிறது.
இதற்கான இரண்டு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அணி நேற்று இங்கிலாந்து சென்றடைந்தது. முறையான கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதாக் இந்தப் போட்டியில் நியூசிலாந்துக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் எனப் பலரும் ஆரூடம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, நியூசிலாந்து வீரர்களுக்கு அவர்களது நாட்டில் இருக்கும் களத்தை போன்றே இங்கிலாந்திலும் இருக்கிறது. அங்குள்ள பந்தின் வேகம், பந்தின் டேர்னிங் ஆகியவை நியூசிலாந்துக்கு பழக்கப்பட்டவையாகும். இதன் காரணமாக தான் இந்த போட்டியில் இந்தியாவை விட அவர்கள் ஒரு படி மேலே உள்ளனர்.
பவுலிங் முக்கியம் பேட்டிங்கை பொறுத்தவரை இரு அணிகளுமே சம பலத்துடன் உள்ளன. இரு அணிகளிலும் ஸ்விங் பந்துகளை திறம்பட கையாலும் வீரர்கள் உள்ளன. ஆனால் இந்த களத்தில் பவுலிங் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த அணி சிறப்பாக பந்துவீசுகிறதோ, அது தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளார்.