பேட் கம்மின்ஸை தொடர்ந்து இந்தியாவுக்கு உதவிய மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்

australia fund bretlee 42lakhs
By Praveen Apr 27, 2021 03:40 PM GMT
Report

 இந்தியாவுக்கு கொரோனா நிதியாக ரூ. 43 லட்சம் தருவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் உபகரணங்களை வாங்குவதற்காக பல தரப்பில் இருந்து நிதி உதவிகள் வந்து கொண்டுள்ளன.

அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரெட் லீ ரூ. 43 லட்சத்தை ஆக்ஸிஜன் தயார் செய்யும் உபகரணங்கள் வாங்குவதற்காக கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 50 ஆயிரம் டாலரை பிரதமரின் நிதிக்கு ஆக்ஸிஜன் உபகரணங்களை வாங்குவதற்காக அளித்தது குறிப்பிடத்தக்கது.