66 நாடுகளில் நடக்காத சோகம் - கணவர் கண்முன்னே ஸ்பெயின் பெண்ணிற்கு இந்தியாவில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை

Spain Brazil India Jharkhand
By Karthick Mar 04, 2024 09:31 AM GMT
Report

இந்திய நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வருகை தந்திருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் தம்பதி

ஸ்பெயின் - பிரேசிலைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 66 நாடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள அவர்கள் தற்போது இந்திய வந்துள்ளனர்.

brazil-women-raped-in-india-creates-controversy

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர்கள் கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் டும்கா மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அப்போது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, கணவரின் கண்முன்னே ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

4 பேர் கைது

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணே வீடியோ வெளியிட விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

brazil-women-raped-in-india-creates-controversy

இந்தத் தம்பதி கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் இருந்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் வருவதற்கு முன்னர் இவர்கள் , தென்னிந்தியா, காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்,.