இவரால் தான் இந்திய அணி தோற்கும் : அடித்து சொல்லும் முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது அதில் முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் இந்த டெஸ்ட் தொடர் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா நிறைய கஷ்டப்பட போகிறார் என கூறியுள்ளார். நல்ல துவக்கம் கொடுத்து அதற்குப் பின்னர் அவர் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார்.
குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் ரோகித் சர்மா சற்று கஷ்டப்படுவார் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா எப்படி விளையாடப் போகிறார் என்பதை பொறுத்துதான் அவருக்கு இனிவரும் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.