வாடகை வீட்டில் உல்லாசம்; ஆனால் திருமணத்திற்கு மறுப்பு - காதலன் செய்த காரியம்!

Karnataka India Crime
By Jiyath Apr 15, 2024 12:24 PM GMT
Report

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விலகிய காதல் 

கர்நாடக மாநிலம் பெங்களூரு பண்டேபாளையாவை சேர்ந்தவர் ஆதித்யா சிங்(27). இவருக்கு உடற்பயிற்சி கூடத்தில் வைத்து இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காதலித்து வந்த இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் வாடகை வீட்டில் கணவன் - மனைவி போல் வசித்து வந்துள்ளனர்.

வாடகை வீட்டில் உல்லாசம்; ஆனால் திருமணத்திற்கு மறுப்பு - காதலன் செய்த காரியம்! | Boyfriend Stabbed Girlfriend In Karnataka

மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆதித்யா சிங் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணை விட்டு ஆதித்யா சிங் விலக தொடங்கி உள்ளார்.

திருமணமாகி 10 நாள்; வேறொரு நபருடன் புதுப்பெண் செய்த காரியம் - அதிர்ச்சி!

திருமணமாகி 10 நாள்; வேறொரு நபருடன் புதுப்பெண் செய்த காரியம் - அதிர்ச்சி!

காதலிக்கு கத்திக்குத்து 

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண்ணை ஆதித்யா சிங் சரமாரியாக தாக்கியுள்ளார்.

வாடகை வீட்டில் உல்லாசம்; ஆனால் திருமணத்திற்கு மறுப்பு - காதலன் செய்த காரியம்! | Boyfriend Stabbed Girlfriend In Karnataka

பின்னர் வீட்டில் இருந்த கக்த்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை வலைவீசி தேடிவருகின்றனர்.