இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை புறக்கணிக்கும் திமுக உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் - காரணம் என்ன?

Indian National Congress DMK Narendra Modi
By Thahir May 24, 2023 06:12 AM GMT
Report

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவை புறக்கணிக்க பல்வேறு எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசு தலைவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

boycotts-inauguration-of-new-parliament-building

நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, உள்ளிட்ட 19 கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

திறப்பு விழா அழைப்பு கிடைத்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என சில கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.