சோறு போட்டு வளர்த்தேன் நன்றி கெட்டவன் சார் சூரி : போண்டா மணி ஆவேசம்

Soori
By Irumporai Apr 05, 2023 04:56 PM GMT
Report

நடிகர் சூரி பற்றி கடும் விமர்சனத்தை போண்டாமணி முன் வைத்துள்ளார்.

போண்டா மணி

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த நடிகர் போண்டா மணி நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மணிக்குயில், பொன் விலங்கு, அவதார புருஷன், செல்வா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, சுந்தரா ற்றவேல்ஸ், வின்னர், வேலாயுதம், ஜில்லா என சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுகு முன்பு தனது சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அப்போது தனக்கு உதவிக்கு பணம் தேவை என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார் , அவருக்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால்... மற்றும் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை போண்டா மணிக்கு செய்தனர்.  

சோறு போட்டு வளர்த்தேன் நன்றி கெட்டவன் சார் சூரி : போண்டா மணி ஆவேசம் | Bonda Mani Slam Actor Soori

சூரி விமர்சனம்

தற்போது உடல்நலம் தேறிய நிலையில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் நடிகர் சூரி குறித்து பேசும் போது கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் இருந்து வந்து, பட வாய்ப்புகள் தேடி அலைந்த போது, தன் வீட்டில் தங்க வைத்துசாப்பாடு போட்டு கவனித்து கொண்டுள்ளார் போண்டா மணி.

நகைச்சுவை தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்ததோடு, தினக்கூலியாக சூரிக்கு 200 ரூபாய் சம்பளமாக கொடுத்தாராம். அப்படி இருக்கையில் தனக்கு உடல் நிலை சரி இல்லை என்கிற செய்தி வெளியானபோது, உதவி செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஒரு போன் போட்டாவது விசாரித்திருக்கலாம். அன்னைக்கு சோறு போட்டதை கூட மறந்துட்டான், சூரி ஒரு நன்றி கெட்டவன் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது விடுதலை படம் வெளியாகி நடிகர் சூரிக்கு நல்ல பெயரை எடுத்து கொடுக்கும் நிலையில் போண்டாமணியின் பேச்சு அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.