புற்றுநோய் பாதிப்பு - பம்பாய் சகோதரி லலிதா சந்திரன் மறைவு!
பாம்பே சகோதரிகளில் இளையவரான லலிதா காலமானார்.
பாடகி லலிதா
கேரளாவின் திருச்சூரில் முக்தாம்பாள் மற்றும் என் சிதம்பரம் ஐயர் ஆகியோருக்கு மகள்களாக லலிதா மற்றும் அவரது மூத்த சகோதரி சி சரோஜா பிறந்தனர். சினிமாவில் ஆர்வமில்லாத லலிதாவை சரோஜா பாட ஊக்குவித்தார்.
இதனால் தொடர்ந்து இருவரும் சிறுவயது முதலே சேர்ந்து பாட துவங்கினர். தொடர்ந்து, முசிறி சுப்பிரமணிய ஐயர் மற்றும் டி.கே கோவிந்த ராவ் ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்றனர். பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியதில் இருந்து இவர்கள் ‘பம்பாய் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்டனர்.
மறைவு
இருவரும் இணைந்து கடந்த 50 ஆண்டுகளாக பல மொழிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி, 2010 இல் சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், லலிதா(84) ல வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது உடல் அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.