தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதியில் பெற்றோர் - பிள்ளைகள்!! போலீசார் தீவிரம்

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Karthick Feb 08, 2024 09:39 AM GMT
Report

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; அந்த இ-மெயிலில் என்ன இருந்தது - பரபரப்பு!

48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; அந்த இ-மெயிலில் என்ன இருந்தது - பரபரப்பு!


மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், பெற்றோர்கள் பதறி போய் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து கூட்டி சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சென்னை போலீஸ், சென்னை வரம்பில் உள்ள ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.

இந்த கல்வி நிறுவனங்களில் நாசவேலை தடுப்பு சோதனைக்காக அனுப்பப்பட்டு, இந்த மின்னஞ்சல்களை அனுப்பிய குற்றவாளியை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என பதிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.