பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 44 பேர் பலி,100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Pakistan World Bomb Blast
By Jiyath Jul 31, 2023 05:58 AM GMT
Report

பாகிஸ்தானில் நடைபெற்ற அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டு வெடித்துள்ளது.  

குண்டு வெடிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்று ஜமியத் உலமா இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) என்ற அரசியல் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென பயங்கர சத்தததுடன் குண்டு வெடித்தது.

பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 44 பேர் பலி,100க்கும் மேற்பட்டோர் படுகாயம்! | Bomb Blast Political Party Meeting In Pakistan I

இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தற்கொலை படை தாக்குதல்

இந்த சம்பவம் தற்கொலைப் படைமூலம் நடந்திருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. இதனால் அருகாமையிலுள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் இதுகுறித்து முழு விசாரணை வேண்டு என்றும் ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.