பாகிஸ்தான்: 'மிலாடி நபி' கொண்டாட்டத்தில் குண்டுவெடிப்பு - 34 பேர் பலி, 130 பேர் படுகாயம்!
பாகிஸ்தானில் 'மிலாடி நபி' கொண்டாட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
குண்டு வெடிப்பு
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மசூதியின் அருகே மிலாடி நபியை முன்னிட்டு நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை கொண்டாட பொதுமக்கள் கூடியுள்ளனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இதில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வந்துள்ளது.
பொறுப்பேற்கவில்லை
மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுவரை இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த மாதத்தில் மஸ்துங் மாவட்டத்தில் நடந்த 2வது பெரிய குண்டுவெடிப்பு இதுவாகும்.