வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு !! கேரளாவில் பயங்கரம் - ஒருவர் உயிரிழப்பு!!

Kerala Pinarayi Vijayan
By Karthick Oct 29, 2023 07:23 AM GMT
Report

கேரள மாநிலம் களமசேரி பகுதியில் குண்டுவெடிப்பு நடந்துள்ள சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

கேரளாவில் குண்டுவெடிப்பு

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள களமசேரி என்ற பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு மையத்தில் இன்று யெகோவாவின் சாட்சிகள் வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்துள்ளது.

bomb-blast-in-kerala-ernakulam-morning-1-dead

அப்போது சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தாகவும் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 5 பேர் கவலைக்குரிய நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.வெடிவிபத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், குண்டு வெடிப்பால் அங்கு பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

bomb-blast-in-kerala-ernakulam-morning-1-dead

போலீசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குண்டுவெடிப்பிற்கான காரணம் இதுவரை எந்த தகவல் இல்லை. மத வழிபாட்டு கூட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என கூறப்படுகிறது.