கடத்தி கொல்லப்பட்ட 10 வயது சிறுமி - நீதிபதி முன்னிலையில் உடல் கூறாய்வு? வெளியான அதிர்ச்சி தகவல்!

Sexual harassment India West Bengal Crime
By Vidhya Senthil Oct 07, 2024 07:41 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

குல்டியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள குல்டி பகுதியில் பயிற்சி வகுப்புக்குச் சென்ற 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

sexual harassment

மேலும் சிறுமியின் பெற்றோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அப்போது நீதிபதி முன்னிலையில், சிறுமியின் உடல் கூறாய்வு நடைபெற வேண்டும் என்றும், ஜேஎன்எம் மருத்துவமனையில் உடல் கூறாய்வு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!

இதனை எற்றுகொண்ட நீதிபதிகள் சிறுமியின் உடல் கூறாய்வை எய்ம்ஸ் அல்லது  ஜவஹர்லால் நேரு நினைவு மருத்துவமனையில் நடத்த உத்தரவிட்டனர். இதனையடுத்து மேற்கு வங்க காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி கல்யாணியில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவு மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர்.

 உடல்கூறாய்வு

அதன்படி இன்று காலை சிறுமியின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து  , நீதிபதி முன்னிலையில், சிறுமியின் உடல் கூறாய்வு   நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

west bengal

ஏற்கனவே, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் நிலையில், தற்போது 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.