இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட துயரம் : படகு கவிழ்ந்து மாணவர்கள் பலி

srilanka kinniya boataccident
By Irumporai Nov 23, 2021 06:57 AM GMT
Report

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில்  இன்று (நவம்பர் 23) காலை 7.30 அளவில் குறிஞ்சாக்கேணி பகுதியிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக இல்ங்கை போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

பயணம் செய்த அந்த  படகில் 25 முதல் 30 பேர் வரை பயணித்துள்ளதாக , போலீளார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், 17 பேர் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ,சம்பவ இடத்திற்கு  மீட்புப் பணிகளுக்காக 8 கடற்படை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

https://www.facebook.com/watch/?v=595214845053523

இலங்கையின்  குறிஞ்சாக்கேணி பகுதிக்கும், கிண்ணியா பகுதிக்கும் இடையில் சுமார் 100 மீட்டர் தொலைவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதிகளுக்கு இடையில் பாதை வசதிகள் இல்லாமை காரணமாக, மக்கள் படகு மூலமே தமது நாளாந்தம் நடவடிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே, இந்த படகு கவிழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.