கறுப்பை மட்டுமே பேசியவர்கள் தற்போது காவிகளையும் பேசுவது சந்தோஷம் தான் : தமிழிசை செளந்தராஜன்

By Irumporai Apr 28, 2022 09:14 AM GMT
Report

ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

கோவை மாவட்டம் பேரூர் ஆதீனத்தில் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது.

எந்த ஒரு பக்தி நிகழ்வுக்கு சென்றாலும் ஒரு பக்திமானக தான் செல்கிறேன், ஆளுநராக அல்ல. கறுப்பை மட்டுமே பேசுபவர்கள் தற்போது காவிகளையும் பற்றி பேச துவங்கியிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

காவி ஆன்மிகத்தை குறிக்கிறது. தமிழகத்தில் காவி பெரியது, வலியது. சாமியார்கள் அணியும் காவி, தேசிய கொடியில் உள்ள காவி என எல்லா காவியையும் தான் சொல்கிறேன் என்று கூறிய தமிழிசை செளந்தரராஜன் .

ஆளுநர்கள் எல்லாம் ஆளுமை மிக்கவர்கள் தான், சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்று கூறினார்.