ஜனநாயகத்தை காப்பாற்ற...பாஜக நிச்சயமாக தோற்கடிக்கப்படும்....முக ஸ்டாலின் உரை
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கோடு, பாஜக நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என மும்பை எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை
வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள, நாட்டிலுள்ள 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாகியுள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனதா தளம் என முக்கிய கட்சிகள் பல இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியின் இரண்டு கூட்டங்கள் முறையே பீகார் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்று வருகின்றது.
இதில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அவர் பேசும் போது, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கோடு, பாஜக நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பு குழுவை அமைக்கவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
மக்களாட்சிக்கான கொள்கைகள் வேண்டும்
மேலும், குறைந்தபட்ச செயல்திட்டத்தையும் உடனடியாக வகுக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறார். எதேச்சதிகார ஆட்சி முடிந்து மக்களாட்சி மலர தேவையான கொள்கைகள் அடிப்படையில் நம்மை அடையாளப்படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா கூத்தினை தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு ஒளிமயமான ஆண்டாக தனது வாழ்த்துக்களையும் அவர் இந்த கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், பாஜகவிற்கு எதிராக இருக்கும் அனைத்து கட்சிகளையும் இந்தியா கூட்டணியில் சேர்த்தாக வேண்டும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.