பாஜக - விசிகவினர் இடையே மோதல் - பாஜக தொண்டர் மண்டை உடைப்பால் பரபரப்பு..!
அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நேற்று தமிழக சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையடுத்து பல்வேறு கட்சியினரும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சி தலைவர்கள் மாலை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
அப்போது பாஜன கட்சியினர் சார்பில் கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தன. இதை அகற்றி விட்டு விடுதலை சிறுதைகள் கட்சியினர் தங்கள் கொடியை ஏற்றியதில் மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.இதனால் பாஜகவை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் அப்புறம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று சேலம்,புதுக்கோட்டையிலும் பாஜக - விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.