காங்கிரஸ்ஸை காட்டிக்கொடுத்த ஷாருக்கானுக்கு நன்றி - பாஜக..!!
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் படத்திற்கு பாஜக தங்களது பாராட்டை தெரிவித்துள்ளது.
ஜவான் திரைப்படம்
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் படம் நல்ல வசூலை ஈட்டி வருகின்றது. நயன்தாரா, விஜய் சேதுபதி என பலரும் இந்த படம் இந்தியாவில் நடைபெற்ற பல ஊழல் மற்றும் அரசியல் தவறுகளால் நடைபெற்ற அசம்பாவிதங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாகி ஒரு வாரக்காலம் ஆகும் நிலையில், தற்போது வரை படம் 600 கோடி வசூலை பெற்றுள்ளது. வரும் நாட்களிலும் இந்த வசூல் அதிகரிக்கும் என நம்பப்படும் நிலையில், தற்போது படத்திற்கு பாஜக தனது நன்றியை தெரிவித்துள்ளது. அதாவது ஜவான் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரச்சனைகள் என்பது 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை நினைவுப்படுத்துவதாக பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கவுரவ் பாட்டியா ட்வீட்
ஜவான் திரைப்படத்தின் மூலம் 2004 முதல் 2014 வரை ஊழல், கொள்கைகளை முடக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. இந்த 10 ஆண்டின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கடந்த கால சோகமான அரசியலை இது நினைவுப்படுத்துகிறது. காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என ஊழல் மலிந்து முந்தைய காங்கிரஸ் அரசு இருந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழலற்ற அரசாக, தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்கும் அரசாக 9 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை, நேர்மையான ஆட்சியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி எடுத்துள்ளது. காங்கிரஸ் காலத்தில் 1.6 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேநேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தி உள்ளது.
அதோடு பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2.55 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கடன் செலுத்தாத நண்பர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. தப்பியோடிய விஜய் மல்லையா, முந்தைய கடனை கூட திருப்பி செலுத்தாமல் மேலும் கடனை நீட்டித்ததற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ராணுவத்தின் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு 2.3 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை மோடி அரசு வழங்கி இருக்கிறது.
ஒரு ரேங்க்- ஒரே பென்ஷன் திட்டத்துக்காக 1.2 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு வழங்கியுள்ளது. ராணுவத்தை வலுப்படுத்த ரபேல், அபாச்சி, ச்சினூக் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த கால ஆட்சியில் குண்டு துளைக்காத ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு உடனுக்குடன் பதிலடியை மோடி அரசு கொடுத்தது.
We must thank @iamsrk for exposing the corrupt, policy paralysis ridden Congress rule from 2004 to 2014 through "? #JawaanMovie, reminds all viewers of the tragic political past during the UPA government.
— Gaurav Bhatia गौरव भाटिया ?? (@gauravbhatiabjp) September 13, 2023
As he puts it, "Hum jawaan hain, apni jaan hazaar baar daon par laga… pic.twitter.com/9TNH6sE2RJ
பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், மும்பை தாக்குதல் நடந்தபோது அதற்கு பதிலடி கொடுக்க துல்லிய தாக்குதல் நடத்த ராணுவம் அனுமதி கோரியபோது அதற்கு அப்போதைய அரசு அனுமதி மறுத்தது'' என கூறியுள்ளார்.