திமுகவில் இருந்து விலகுவதா? பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது அதுவே விசிகவின் சபதம் - திருமாவளவன்!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் விசிகவின் சபதம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசியதாவது "இந்தியாவை இந்துக்களின் நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும். அதுவே பாஜகவின் நோக்கம்.
ஆனால் அதற்கு தடைக்கல்லாக இருப்பது அம்பேத்கரின் அரசியல் அமைப்புச் சட்டம் தான். பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு, தாழ்வு பார்ப்பது தான் சனாதானம். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. தீட்டு கொள்கை வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்த பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விசிகவின் கொள்கை. சனாதனத்தை பின்பற்றுவது தான் மனுஸ்ருதி. அதற்கு எதிரானது தான் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம்.
பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு, தாழ்வு பார்ப்பது தான் சனாதானம். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. தீட்டு கொள்கை வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்த பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விசிகவின் கொள்கை. சனாதனத்தை பின்பற்றுவது தான் மனுஸ்ருதி. அதற்கு எதிரானது தான் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம். கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக என அனைத்துக் கட்சிகளின் குரலும் அம்பேத்கரின் குரலாகவே இருக்கிறது.
வதந்திகளை பரப்பினார்கள்
மொழிகள் மாறினாலும் கருத்து ஒன்று தான். நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக உழைக்க வேண்டும். 40 தொகுதியிலும் நமது கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அதுவே விசிகவின் சபதம். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். உடனே திமுகவை பலவீனமாக்குவதற்காக திருமாவளவன் திமுகவில் இருந்து விலகுவதாக வதந்திகளை பரப்பினார்கள். ஒரு சமூக இயக்கமாக இருந்துகொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது.
பயிற்சி இன்றி யாரும் எந்த விளையாட்டிலும் வெற்றி பெற முடியாது. அரசியல் பல சூழ்ச்சிகள் நிறைந்த களம். அதில் வெல்ல பயிற்சி தேவை. திருமாவளவன் வெற்றி பெற்று விட்டால் போதும் என்று இருக்கக்கூடாது. 40 தொகுதியிலும் நமது கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும் " என திருமாவளவன் பேசியுள்ளார். இந்த பேச்சின் மூலம் திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகப்போவதில்லை என்பதை திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார் .