கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - தமிழிசை சௌந்தராஜன்

people governor bjp pondy
By Praveen Apr 16, 2021 09:14 PM GMT
Report

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

'புதுச்சேரியில் பகுதி நேர ஊரடங்கு என்ற நிலைக்கு செல்லாமல் இருப்பது பொதுமக்களின் கையில்தான் உள்ளது' என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வாகனம் மூலம் விவசாயிகள் ஒன்று கூடும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், 100 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.